
INTRO :
ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” ராஜபக்ச குடும்பம் தப்பி ஓட்டம் ராஜபக்ச குடும்பம் கொழும்பு-05 திம்பிரிகஸ்யாக போலீஸ் மைதானத்தில் இருந்து திருகோணமலைக்கு தப்பி ஓட்டம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது! “ என இம் மாதம் 10 ஆம் திகதி (10.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
முன்னாள் பிரதமர் ராஜபக்ஷ தப்பி ஓடியதாக என பரவுகின்ற புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த பதிவானது OneIndia Tamil என்ற இணையத்தளத்தில் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இந்நிலையில் குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி எடுத்த புகைப்படம் என கண்டறியப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியினை தழுவிய பின்னர், தங்காலை நோக்கி செல்லுவதற்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் ஏறும் காட்சி என உறுதியானது.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி இணைப்புக்கள்
colombotelegraphI sundaytimes.lk
இந்த புகைப்படத்தை சிரேஷ்ட புகைப்பட ஊடகவியலாளர் சுசந்த லியனவத்தவும் எடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில், ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சிஎன பகிரப்படும் புகைப்படம் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ராஜபக்ஷ குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பியோடிய காட்சியா இது?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team