கொரோனா தடுப்பு ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்களை வீதியில் கொண்டுவந்து அலையவிட்டது அந்நாட்டு அரசு, என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News Link | News Archived

இலங்கை தமிழ் செய்திகள் sri lanka Tamil news என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா தடுப்பு ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்களை வீதியில் கொண்டுவந்து அலையவிட்டது அந்நாட்டு அரசு. ” என்று இம்மாதம் 23 ஆம் திகதி (23.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த பதிவில் அத்துடன் குறித்த பதிவில் Online Jaffna இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தி லிங்கையினையும் இணைத்துள்ளனர்.

Facebook Link | Archived link

தற்போது யாழ்ப்பாணத்திலும் குறித்த சிங்கம் உலவுவதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றனர்.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில் செய்தோம், குறித்த புகைப்படம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இலங்கையில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பிச் சென்ற சிங்கம் என இதற்கு முன்னரே இலங்கையில் தவறான செய்தி பரப்பப்பட்டது.

இதனை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையின் போது, 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

நாம் ஏற்கனவே மேற்கொண்ட உண்மை தேடல் பரிசோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில் இருந்து கிடைத்த ஆதாரங்களின்படி தென்னாப்ரிக்காவில் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிங்கத்தின் புகைப்படத்தை தற்போது கொரோனா வைரஸ் உடன் தொடர்புபடுத்தி பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்கள் வீதியில் அந்நாட்டு அரசு அலையவிட்டது, என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Avatar

Title:ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்கள்; உண்மை தெரியுமா?

Fact Check By: Nelson Mani

Result: False