பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதை போன்று சந்திராயன் 3 எடுத்த புகைப்படத்தில் உள்ளதா?

சமயம் சமூக ஊடகம்

INTRO :

தமிழ் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளவாறு சந்திராயன் 3 நிலவில் எடுத்த புகைப்படத்தில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link 

சமூகவலைத்தளங்களில் “ஓம் நவச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻

#சைவமும் #தமிழும் காலத்தால் முற்பட்டது. 👏🙏🏻

#தமிழரின் #அறிவியல் எப்போதும் முதன்மைதான். 👍

#நாம் #தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்💪

புகைப்படம் 1 

ஆகஸ்ட் 3-ந்தேதி எடுக்கப்பட்டது. சந்திரனும்,சனியும் ஒன்றாக தெரிகிறது அருகில் உள்ள அன்றைய பஞ்சாங்கத்தை பார்க்கவும்.

புகைப்படம் 2

சந்திரயான் இன்று அதிகாலை எடுத்த படம் இது, ஆச்சர்யம் என்னவென்றால், சந்திரனுக்கு அருகில் இருக்கும், சிகப்பாக இருக்கும் (பந்து போல) கிரஹம்தான் செவ்வாய்.

நேற்றைய கோச்சாரத்தில் (நிகழும் பஞ்சாங்க கிரஹச்சாரத்க்கட்டத்தில்) #சந்திரனும், #செவ்வாயும் ஒன்றாக உள்ளது.

#நம் #முன்னோர்கள் #ஒன்றும் #முட்டாள் அல்ல 

#அவர்கள் #வகுத்தப்பாதையில் தான் இன்றைய #விஞ்ஞானமே வளர்ந்து கொண்டிருக்கிறது எவ்வளவு #துல்லியம்.# “ என இம் மாதம் 24 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (24.08.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, முதலில் சந்திராயன் 3 தொடர்பாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டும் இஸ்ரோவின் X சமூகவலைத்தளத்தினை நாம் ஆய்வு செய்தபோது, இவ்வாறான எவ்விதமான புகைப்படங்களையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து, குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இந்த படத்தை நாசா 2020ம் ஆண்டில் வெளியிட்டிருப்பது காணக்கிடைத்தது.

nasa.gov I Archive

நாசா வெளியிட்டிருந்த அந்த பதிவில் பூமியில் தென் அமெரிக்காவில் இருந்து சக்திவாய்ந்த தொலைநோக்கி வைத்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், செவ்வாய் கிரகத்தை நிலவு மறைக்கும் நிகழ்வு இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை Sergio Scauso என்பவர் எடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் Sergio Scauso உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆய்வினை மேற்கொண்ட போது குறித்த புகைப்படத்தை தன்னுடைய கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதை போன்று சந்திராயன் 3 எடுத்த புகைப்படத்தில் உள்ளதாக தெரிவித்து இணையத்தில் பகிரப்படும் புகைப்படங்கள்  நாசாவால் வெளியிடப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதை போன்று சந்திராயன் 3 எடுத்த புகைப்படத்தில் உள்ளதா?

Written By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *