
சஜித் பிரேமதாச பிரதமரானால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கோசைக்கு தடை உத்தரவு கொண்டுவருவதாக ரஞ்சன் ராமநாயக தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில் ” சஜித் பிரேமதாச பிரதமராகினால் முஸ்லிம் பள்ளிவாயல்களில் பாங்கோசையை 5 நேரங்களிலும் ஒளிபெருக்கியில் கூறுவதற்கான தடை உத்தரவை நாம் கொண்டுவருவோம். ரஞ்சன் ராமநாயக ” என்று இன்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக ரஞ்சன் ராமநாயகவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வினவிய போது, அவர் குறித்த தகவல் முற்றிலும் போலியானது என்று தெரிவித்தார்.
அவ்வாறு அவர் கூறியதற்கான எவ்விதமான ஆதாரங்கள் இல்லை எனவும், யாரும் இதுபோன்ற போலியான தகவல்களை எளிதில் பரப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாம் இது குறித்து செய்திகள் எதும் வெளியாகியுள்ளதா என்று கூகுள் செய்தியில் தேடுதல் செய்தபோது, அவ்வாறான செய்திகள் எதுவும் வெளியாகி இருக்கவில்லை.

இதற்கமைய சஜித் பிரதமரானால் பாங்கோசைக்கு தடை விதிப்போம் என்று ரஞ்சன் ராமநாயக தெரிவித்தாக பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களுடன் சஜித் பிரதமரானால் பாங்கோசைக்கு தடை விதிப்போம் என்று ரஞ்சன் ராமநாயக தெரிவித்தாக பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Title:சஜித் பிரதமரானால் பாங்கோசைக்கு தடை விதிப்போம் என்று ரஞ்சன் ராமநாயக தெரிவிப்பா?
Fact Check By: Nelson ManiResult: False