அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Misleading இலங்கை | Sri Lanka


INTRO :

அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.



தகவலின்விவரம் (What is the claim):

 Facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில்“போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் சுயவிவரம் நீக்கப்படுவதற்கு முன்பே கசிந்தது. அவரது உண்மையான பெயர் டேவிட் கோஹன், அவர் இஸ்ரேலைச் சேர்ந்த யூதர்‼️

“என இம் மாதம் 16 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (16.12.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரின் பேஸ்புக் கணக்கு என இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்தபோது, சாதாரணமாக உள்ள பேஸ்புக் கணக்கில் இருந்து  வேறுபட்ட பல அம்சங்கள் காணக்கிடைத்தது.

அதில் ‘Add new friends’ என்ற சொல் இடம்பெற்றுள்ள About பிரிவில் சாதாரண பேஸ்புக் கணக்கில் காணப்படாது. மேலும் அதில் Eeopis மற்றும் “Engage” என இடப்பட்டுள்ள அம்சம் பேஸ்புக் கணக்கில் காணப்படுவது போல் இருக்காது.

மற்றும் அதில் காணப்பட்ட சில எழுத்து பிழைகள் காரணமாக இது செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழு நாம் அதனை செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவியில் இட்டு ஆய்வு செய்தோம்.

குறித்த ஆய்வின் போது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை – மகன் யார்?

தந்தையின் பெயர் சஜித் அக்ரம், அவருக்கு 50 வயது. மகனின் பெயர் நவீத் அக்ரம், அவருக்கு 24 வயது.

முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.12.2025) போன்டை கடற்கரையில், யூத ஹனுக்கா பண்டிகைக்காக கூடியவர்கள் மீது இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த இரண்டு பேர் தனிப்பட்ட முறையிலேயே செயல்பட்டார்கள் என்றும் அவர்கள் எந்தப் பெரிய பயங்கரவாத குழுவின் பகுதியாகவும் இல்லை என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி தெரிவித்தார். பிபிசி செய்தி

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின்  பேஸ்புக் கணக்கு என பரவுகின்ற தகவல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:அவுஸ்ரேலியாவின் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *