INTRO :
தலகொடுவ பெட்ரோல் வரிசையில் மரணித்தவர் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” 🔴பெட்ரோல் வரிசையில் மற்றொரு மரணம்.

தலகொடுவ தோட்டத்தில் பெற்றோல் வரிசை‼️

🔴Another death in the petrol queue.

Thalakotuwa garden petrol queue‼️

🔴පෙට්‍රල් පෝලිමේ තවත් මරණයක්.

Thalakotuwa garden petrol පෝලිමේ ‼️ “ என இம் மாதம் 16 ஆம் திகதி (16.06.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

தலகொடுவ தோட்டத்தில் பெட்ரோல் வரிசையில் மரணம் என பரவுகின்ற செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

இச்சம்பவம் தொடர்பாக தலகொடுவ பூங்கா பகுதியைச் சேர்ந்த கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாம் தொடர்புக்கொண்டு வினவினோம்.

அப்பகுதியில் உள்ள பெட்ரோல் வரிசையில் இந்த சம்பவம் நடைபெறவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமக்கு தெரிவித்தார்.

தலகொடுவ பார்க் வீதியில் உள்ள இல்மா சர்வதேச பெண்கள் பாடசாலைக்கு அருகில் உள்ள வாகனத்தரிப்பிடத்தில் தனது பேத்தியை பாடசாலையில் இருந்து அழைத்துச் செல்ல வந்த தாத்தா தீடீர் சுகவீனத்தினால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.

குறித்த வீதியில் உள்ள இல்மா சர்வதேச பெண்கள் பள்ளி மற்றும் ஆசிய சர்வதேச பாடசாலையின் ஊழியர்களிடம் விசாரித்தோம்.

இப்பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் நாம் இது குறித்து வினவியபோது AIS க்கு அருகிலுள்ள இல்மா சர்வதேச பெண்கள் பாடசாலைக்கு அருகிலுள்ள வாகனத்தரிப்பிடத்தில் காரை நிறுத்தியிருந்த ஏசியன் இன்டர்நேஷனல் பாடசாலையின் தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவியின் தாத்தாவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை நிறைவடைந்ததையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையினால் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

அந்த நேரத்தில், அருகில் இருந்த மருத்துவர் வந்து அந்த நபரை பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் உறுதிப்படுத்தியதாக எமக்கு தெரிவித்தார்.

அந்த வீதியில் எரிபொருள் வரிசை காணப்பிடவில்லை என எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. மேலும் குறித்த பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் லங்கா வைத்தியசாலைக்கு அருகில் ஓர் எரிபொருள் நிரப்பு நிலையமும், கொழும்பு 05 இல் மயூரா கோயிலுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமும் இதில் உள்ள வரிசைகள் எவ்விதத்திலும் தலகொடுவ பூங்கா வீதிக்குள் நுழைய வாய்ப்பில்லை எனவும் கண்டறியப்பட்டது.

Google Maps

AIS ஆசிரியையான Rochelle Melder, அவர் பெட்ரோல் வரிசையில் நின்று இறந்ததாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட புகைப்படம் உண்மையற்றது என்றும், அது ஏசியன் இன்டர்நேஷனல் பாடசாலைக்கு அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட திடீர் மரணம் என்றும் உறுதிப்படுத்தினார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் (Tub on the Rocks) நாமும் இது குறித்து விசாரித்தோம், அவர்களும் மேற்கண்ட தகவலை உறுதி செய்ததோடு, குறித்த பாதையில் இதுவரை எரிபொருள் வரிசைகள் இருந்ததில்லை என்பதை உறுதி செய்தனர்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடலில் தலகொடுவ பெட்ரோல் வரிசையில் மரணித்தவர் என பகிரப்படும் செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:தலகொடுவ பெட்ரோல் வரிசையில் மரணித்தவரா இவர்?

Fact Check By: S G Prabu

Result: Misleading