INTRO :

இலங்கையில் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் 50 கோடி பெறுமதியான புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

திசைகள் நியூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” நேற்று பெய்த மழையில் கம்பொல புஸ்ஸல்லாவ அதி வேக வீதிக்கருகில் 50கோடி ரூபாய் பெருமதியான #புதையல் கண்டெடுக்கப்பட்டுளது” என இம் மாதம் 24 ஆம் திகதி (24.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த செய்தி 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இணையங்களில் பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

அத்தேடலின் போது, குறித்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சம்பவத்துடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டது.

nypost.com | Archived link

குறித்த புகைப்படம் 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதிகளினால் கண்டுபிடிக்கப்பட்ட புதையல் என அதில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த மற்றைய புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்த வேளையில் அது சிசேரியாவில் உள்ள பண்டைய துறைமுகத்தில் கிடைக்கப்பெற்ற தங்க நாணயங்கள் என்று கண்டறியப்பட்டது.

jpost.com| Archived link

மற்றைய இரு புகைப்படங்களும் நமது தேடலின் போது இந்திய நாட்டில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்ற நிலையில் அதன் உத்தியோகப்பூர்வ அல்லது நம்பகத்தன்மையான எவ்விதமான அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

குறித்த பேஸ்புக் பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு எவ்விதமான அதிவேக வீதியும் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தற்போது தெற்கு அதிவேக வீதி மட்டுமே பாவணையில் உள்ள து. மற்றைய பாதைகள் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.

RDA | Archived link

நாம் மேற்கொண்ட தேடலில் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் 50 கோடி பெறுமதியான புதையல் கண்டெடுப்பு என பகிரப்பட்ட செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:புஸ்ஸல்லாவ பகுதியில் 50 கோடி பெறுமதியான புதையல் கண்டெடுப்பா?

Fact Check By: Nelson Mani

Result: False